Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics2024 இந்தியாவுக்கு 20வது பதக்கம் - சரத் குமார் வெள்ளி.., மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தல்!

06:43 AM Sep 04, 2024 IST | Web Editor
Advertisement

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்களான சரத்குமார் வெள்ளி மற்றும் மாரியப்பன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார்

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும். மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர். வீராங்கனைகள் மொத்தம் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதன் மூலம் இந்திய அணி இதுவரை மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது. அவற்றில் 10 வெண்கலம் , 7 வெள்ளி மற்றும் 3 தங்கம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 19 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் தற்போது வரை 20 பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது

Tags :
Mariyappanparalympicsparalympics 2024
Advertisement
Next Article