For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பி.வி. சிந்துவின் அபார வெற்றி - உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேற்றம்!

உலகின் நம்பர்-2 வீராங்கனையை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து.
08:20 PM Aug 28, 2025 IST | Web Editor
உலகின் நம்பர்-2 வீராங்கனையை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து.
பி வி  சிந்துவின் அபார வெற்றி   உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேற்றம்
Advertisement

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி. சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (Pre-Quarter Finals), உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்த்துப் போராடி, 21-19, 21-15 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வெற்றி, பி.வி. சிந்துவுக்கு மேலும் ஒரு மைல்கல்லை எட்ட உதவியுள்ளது. வாங் ஜி யி-யுடன் இதுவரை மோதிய ஐந்து ஆட்டங்களில், சிந்துவின் வெற்றி விகிதம் 3-2 என உயர்ந்துள்ளது. இது, அவருக்கு மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது 30 வயதான பி.வி. சிந்து, காலிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். புத்ரி குசுமா உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெற்றால், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் 6 பதக்கங்கள் வென்றவர் என்ற சாதனைக்கு இணையாக, தனது 6வது பதக்கத்தை உறுதி செய்வார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிராஸ்டோ ஜோடி, அயர்லாந்து ஜோடியான ஃபின்ஹோலி ஜோடிக்கு எதிராக 21-11, 21-16 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களின் வெற்றி, இந்தியாவிற்கு இரட்டையர் பிரிவில் பதக்க வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது.

Tags :
Advertisement