Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மக்கள்நல திட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்" - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி!

11:09 AM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

"மக்கள்நல திட்டங்கள் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்" என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.  240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.

Advertisement

பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார்.  இந்தச் சூழலில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதேபோல், மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது.  ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர்.  மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும்.  ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10மணி அளவில்  இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் "பார்த்ருஹரி மஹ்தாப்" பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தின் முன்பு  வைக்கப்பட்ட காந்தி சிலையின் முன்  ஒன்று கூடினர். ஒற்றுமையின் அடையாளமாக திகழும் காந்தி சிலை முன்பு ஒன்றுகூடிய பின்னர் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒன்றாக 10.30 மணிக்கு மக்களவைக்குள்  நுழைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்ததாவது..

“இந்த வராலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன். முதன்முறையாக புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எம்.பி.க்கள் பதவியேற்பு நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.

புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் இது. எங்களது நோக்கம், செயல்பாடு,ஆகியவற்றுக்காக 3வது முறையாக மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடர் ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்.

நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்.பி.க்கள் பாடுபடவேண்டும். மக்கள்நல திட்டங்கள் நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” “ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
18th LokshabaNarendra modiPM ModiPRESS MEET
Advertisement
Next Article