For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எதிர்கட்சியினர் தொடர் அமளி - மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
12:26 PM Aug 05, 2025 IST | Web Editor
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்கட்சியினர் தொடர் அமளி   மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
Advertisement

கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisement

இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
Advertisement