For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ஆபரேஷன் சிந்தூர்' : இந்திய ராணுவத்தை நினைத்து பெருமையடைகிறோம் - ராகுல் காந்தி!

இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
10:07 AM May 07, 2025 IST | Web Editor
 ஆபரேஷன் சிந்தூர்    இந்திய ராணுவத்தை நினைத்து பெருமையடைகிறோம்   ராகுல் காந்தி
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement

மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய்ஹிந்த்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement