For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!

04:09 PM Oct 09, 2024 IST | Web Editor
ஆயுதபூஜை  விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்   southernrailway அறிவிப்பு
Advertisement

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இந்த நாட்களைத் தொடர்ந்து, மறுநாள் அக். 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்களும் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. எனவே, வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவர் என்பதால் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நாளை (அக். 10) மற்றும் அக்டோபர் 12 ஆகிய 2 தேதிகளிலும், அதேபோல் மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே நாளை மறுநாள் (அக். 11) மற்றும் அக். 13-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை மற்றும் அக். 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் (கேரளா) இடையே மற்றும் மறு மார்க்கத்தில் கோட்டயம் (கேரளா) - சென்னை சென்ட்ரல் இடையே நாளை மறுநாள் (அக். 11) மற்றும் அக். 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், எர்ணாகுளம் - மங்களூர் இடையே நாளையும் (அக். 10), மறுமார்க்கத்தில் மங்களூர் - எர்ணாகுளம் இடையே நாளை மறுநாளும் (அக். 11) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement