Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”பட்ஜெட் அறிவிப்புகளில் பாதியை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது” - அன்புமணி குற்றச்சாட்டு!

பட்ஜெட் அறிவிப்புகளில் பாதியை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளாதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
04:23 PM Sep 18, 2025 IST | Web Editor
பட்ஜெட் அறிவிப்புகளில் பாதியை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளாதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021&22ஆம் ஆண்டில் தொடங்கி 2025&26ஆம் ஆண்டு வரை மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 8634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மரபு.  வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 4516 மட்டுமே, அதாவது 52.30% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 3455 (40%) அறிவிப்புகளுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை பிறப்பிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 2021&ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டும், அவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை என்றால் அத்திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டு விட்டன என்று தான் பொருள் ஆகும். அதேபோல், 2022&ஆம் ஆண்டில் 394 திட்டங்களும், 2023&ஆம் ஆண்டில் 593 திட்டங்களும், 2024ஆம் ஆண்டில் 941 திட்டங்களும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் கிடக்கின்றன. நடப்பாண்டில் கூட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட 1827 திட்டங்களில் வெறும் 193 திட்டங்கள் மட்டும் தான் கடந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1291 திட்டங்களுக்கு அரசாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று அடையாளம் காணப்பட்டு கைவிடப்பட்டு விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் எந்தவொரு திட்டமும் போகிற போக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் அதற்காக சம்பந்தப்பட்ட துறையின் கள அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை பல நிலைகளில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தான் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்பட்ட திட்டங்கள் சாத்தியமற்றவை என்று இப்போது தான் தெரியவந்ததாகக் கூறுவது ஏற்க முடியாது.

2019&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் விலக்கு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நீர் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார்கள். அதன் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அவர்கள், நான்கரை ஆண்டுகள் கடந்த பிறகு இப்போது நீட் தேர்வை தங்களால் ரத்து செய்ய முடியவில்லை என்றும், மத்தியில் திமுக பங்கேற்கும் ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறி கைகழுவுகின்றனர்.

தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றாமல் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் நிதிநிலை அறிக்கையிலும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, அவற்றை சாதனையாகக் காட்டி, பாராட்டு விழாக்களையும் நடத்தி விட்டு, இப்போது 256 திட்டங்களை சாத்தியமற்றவை என்றும், 3455 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது”

என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
ANBUMANIDMKlatestNewsPMKTNnews
Advertisement
Next Article