"கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழ்நாடு சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். அப்போது பேசியவர்,
"விவசாயிகளிடம் இருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் உள்ளது. இதனால் 15 லட்சம் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்ற பின் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது வரை போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.