For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Karaikudi ரயில்வே சுரங்கப்பாதைக்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

10:51 AM Oct 13, 2024 IST | Web Editor
 karaikudi ரயில்வே சுரங்கப்பாதைக்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Advertisement

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.

Advertisement

காரைக்குடி லட்சுமி நகா் பொன் நகா் செல்லும் ரயில்வே கடவுப்பாதை அருகே ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், இந்த சுரங்கப் பாதை முழுவதும் மழைநீா் நிரம்பியது. இந்த நிலையில், இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் ஒருவரின் உடல் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காரைக்குடி இருப்புப் பாதை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று சுமாா் 2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த வண்ணம் தீட்டும் தொழிலாளி பீட்டா் (55) என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement