For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?" - கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
12:46 PM Jun 03, 2025 IST | Web Editor
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்   உங்களிடம் ஆதாரம் உள்ளதா     கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் நாளை மறுநாள் (ஜூன் 5) வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார்.

Advertisement

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் அவர் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியது. இதனால் கர்நாடகாவில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகாவில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதன்படி, "நீங்கள்(கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது . தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா?" என பல்வேறு கேல்விகளை எழுப்பியுள்ளது.

Tags :
Advertisement