For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் - பூந்தமல்லியில் பறிமுதல்.!

10:16 PM Jan 28, 2024 IST | Web Editor
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள்   பூந்தமல்லியில் பறிமுதல்
Advertisement

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை  போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Advertisement

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’  என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்தும், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கின. இதனையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனையடுத்தும், பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இன்று கேரளா நோக்கி சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகள் சென்னை அடுத்த பூந்தமல்லியில் போக்குவரத்து துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, இரண்டு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பயணிகளுக்கு மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யும் பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement