Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Nungambakkam | பப்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

01:54 PM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் ராமாபுரத்தில் உள்ள பி.ஜி ஹாஸ்டலில் தங்கி இருந்தார். இந்த சூழலில் முகமது சுகைல் நேற்று (ஆக. 17) இரவு பெண் தோழிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது நடனமாடிக்கொண்டிருந்த போது முகமது சுகைல் திடீரென மயக்கமடைந்தார். அவர் சுயநினைவின்றி இருந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடல் கேஎம்சி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
deathinvestigationnungambakkamPolice
Advertisement
Next Article