For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இனி NDA தான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை" - முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி.!

09:42 PM Jan 28, 2024 IST | Web Editor
 இனி nda தான்   வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை    முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் பேட்டி
Advertisement

"இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டனிதான் , வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை"  என முதலமைச்சராக பதவியேற்ற பின் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் முதலமைச்சர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இந்தியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இந்தியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பீகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பீகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார். இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்றார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் தெரிவித்ததாவது..

"நான் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்தேன், நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்றோம், ஆனால் இப்போது நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், இனி ஒன்றாகவே இருப்போம். புதிய அமைச்சரவையில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர், மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்பார்கள். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எங்கள் கட்சி பாடுபடும். நாங்கள் அதையே செய்வோம், வேறொன்றுமில்லை. தேஜஸ்வி மாநில மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இப்போது நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பிவிட்டேன், இனி வேறு எங்கும் செல்வதற்கான கேள்விக்கே இடமில்லை" என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement