For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

08:44 PM Apr 01, 2024 IST | Web Editor
அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
Advertisement

ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு, ஜல்லிக்காட்டுவளவு, மந்திவளவு ஆகிய பகுதிகளில் 50 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கவில்லை. சரப்பங்கா நதியின் ரயில்வே பாலத்தில் நான்கு வழிகள் உள்ளது. இதில் கடைசி வழியில் பாதை அமைத்து கொடுப்பதாக அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் தேர்தலுக்கு தேர்தல், வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகின்றனர். மேலும், சரபங்கா நதியில் தடுப்பணை கட்டாமல் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் இந்த மூன்று கிராம மக்களும் நடப்பு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், கிராமம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் கட்டி வைத்துள்ளனர். வீடுகள், தெருக்களில் கருப்பு கொடி கட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று கிராம மக்கள் ஒன்று கூடி ஓமலூர் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் முறையாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூட்ட அரங்கிற்கு
அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை
நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் எழுத்து பூர்வ
உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம மக்கள்
கூறும் போது எங்கள் பகுதி, தொகுதியின் கடை கோடியில் இருப்பதால், யாரும் எங்கள்
கிராமத்தை கண்டுகொள்வது இல்லை.

அவசர மருத்துவத்திற்கு கூட செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். அதனால், சாலை அமைக்க வேண்டும், ரயில்வே உயர்மட்ட பாலம்கட்ட வேண்டும், சரப்பங்கா நதியில் தடுப்பணை கட்ட ஒதுக்கிய 75 லட்ச ரூபாய் நிதியை முறையாக பயன்படுத்தி தடுப்பணை கட்ட வேண்டும். அரசு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை செய்து கொடுக்காவிட்டால் தேர்தலை தொடர்ந்து புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப கொண்டு சென்றனர்.

Tags :
Advertisement