Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தூரில் 2 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

03:08 PM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 2,04,832 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  பின்னர் மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில்,  மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது.  அதன்படி,  இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10,63,842 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.  நோட்டா 2,04,832 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் லக்‌ஷ்மன் சோலங்கி 44,828 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில்  உள்ளார்.

Tags :
BJPElections with News7 tamilIndoreMadhya pradeshNotaParliament Elections2024
Advertisement
Next Article