Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஒரு ரூபா கூட இல்ல... இதுல CCTV கேமரா வேற...” - விரக்தியில் திருடன் செய்த செயல் இணையத்தில் வைரல்!

07:20 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில் திருட வந்த இடத்தில் பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் செய்துசென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

திருடர்கள் திருடுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து செல்வதும், அங்கு அவர்களுக்கு கிடைக்கும் பல்புகளும், சில நேரங்களில் கிடைக்கும் அடி உதைகளும் அவ்வப்போது சிசிடிவி காட்சியாக வெளியாகி வைரலாகும். ஏன் திருட்டுக்கு போஸ்டர் அடித்து நடிகர் வடிவேலு பாணியில் நடந்த சம்பவத்தை கூட நாம் கேள்வி பட்டதுண்டு. அந்த வகையில், இல்லை.. இல்லை.. ஒரு புதிய வகையில் திருடர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“இதுபோல ஒரு நிலைமை எந்த திருடனுக்கும் வரக் கூடாது”ன்னு சொல்லும் அளவிற்கு நடந்த ஒரு தரமான சம்பவத்தை காணலாம். தெலங்கானா மாநிலம் ரங்காராநட்டி மாவட்டம், மகேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தான் யார் என்றே அடையாளம் தெரியாத வகையில் முகமூடி, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்த மர்ம நபர் ஒருவர் அந்த உணவகத்திற்கு திருடுவதற்காக சென்றுள்ளார்.

சுற்றத்தார் யாரும் கண்டறியாத வகையில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார் அந்த நபர். கடையில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேடி பார்த்துள்ளார். ஆனால், அந்த வகையில் அங்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை. சரி... பொருள் தான் எதுவும் கிடைக்கவில்லை, மாறாக பணம் எதாவது கிடைத்தால் எடுத்துச் செல்வோம் என்று பார்த்து அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார் திருடர். ஆனால் பணமும் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த நபர் கண்காணிப்பு கேமராவின் முன்பாக வந்து ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது கேமராவை மட்டும் ஏன் பொருத்தி வைத்துள்ளீர்கள் என்று கேட்பது போல் கேமரா முன்பாக சைகை காண்பித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “சரி.. வந்ததுக்கு சாப்பிட்டு போவோம்” என்று நினைத்து பிரிட்ஜை திறந்து பார்த்தார்.

அடுத்த அதிர்ச்சியாக பிர்ட்ஜில் தண்ணீர் மட்டுமே இருந்துள்ளது. பின்னர் அந்த தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உங்கள் கடையில் நான் எதையும் எடுத்துச் செல்லவில்லை. குடித்த தண்ணீருக்கும் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சைகையில் கூறிவிட்டு தன்னிடம் இருந்த 20 ரூபாயை மேஜை மீது வைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் நடைபெற்ற கடையின் உரிமையாளர் மீண்டும் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இடத்தில் அப்படியே இருந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடன் செய்த அட்ராசிட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

Tags :
CCTVHotelNews7Tamilnews7TamilUpdatesTelanganaThiefviral video
Advertisement
Next Article