For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எந்த ஒப்பந்தத்திலும் இன்னும் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்

07:29 AM Dec 01, 2023 IST | Web Editor
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எந்த ஒப்பந்தத்திலும் இன்னும் கையெழுத்திடவில்லை   ராகுல் டிராவிட்
Advertisement

பிசிசிஐ உடன் பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்த எவ்வித ஆவணமும் கையெழுத்திடவில்லை எனவும், பதவி நீட்டிப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதனையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்தது.

எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பிசிசிஐ-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் இன்னும் வரவில்லை" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement