For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் குவியும் கண்டனம்!

01:02 PM Dec 07, 2023 IST | Syedibrahim
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் குவியும் கண்டனம்
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நிக்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர். இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.  இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில்,  இந்த வார தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.  முதலில், சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும்,  அவரை சமையலறை பக்கம் வரவேண்டாம் என்றும் நிக்சன் கூறினார்.  இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்கில் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும்,  நிக்சனும் மாறிமாறி கருத்துகளை தெரிவித்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.

இந்த நிலையில்,  இன்று வெளியான முதல் ப்ரோமோவில் வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரை நிக்‌சன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசுகிறார்.

தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனாக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  தவறான கருத்துகளை பேசுவதாக பெண்களால் குற்றம்சாட்டப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே போட்டியாளர் வினுஷா தேவியை உருவக்கேலி செய்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும்,  நிக்சனுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Tags :
Advertisement