For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் - என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவு!

மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
04:23 PM Aug 02, 2025 IST | Web Editor
மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்   என் ஐ ஏ நீதிமன்றம் உத்தரவு
Advertisement

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தல் மற்றும் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கன்னியாஸ்திரிகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளைக் கடத்தி, மதமாற்றம் செய்ய முயன்றதாக இந்தக் கன்னியாஸ்திரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ நீதிமன்றம் கையில் எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த முடிவை கேரள அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் பி. சந்தோஷ் குமார், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த விடுதலையை வரவேற்று, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மற்றும் கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement