நியூஸ்7தமிழ் செய்தி எதிரொலி - கருங்குளத்தில் வெள்ளத்தில் தவித்த மக்கள் மீட்பு..
கருங்குளம் சத்திரம் மெயின் ரோட்டில் தாமிரபரணி வெள்ள பெருக்கினால் சிக்கியவர்கள் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக இன்று டிச.19 தமிழ்நாடு காவல் துறையினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். மீட்பு குழுக்கள் அனைவரையும் மீட்டு வருகிறது. பல மக்கள் தங்களை மீட்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் சத்திரம் மெயின் ரோட்டில் தாமிரபரணி வெள்ள பெருக்கினால் டிச.17. ந்தேதி இரவிலிருந்து மொத்தம் 70 வது நபர்கள் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தவித்து வந்தனர். இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று டிச. 19அதிகாலை 3:00 மணி அளவில் தமிழ்நாடு அரசு காவல் துறை முயற்சியினால் மோட்டார் படகு மூலமாக 70 நபர்களும் பத்திரமாக மீட்கபட்டு செய்துங்கநல்லூர் புது பள்ளிவாசலில் தங்கவைக்கபட்டுள்ளனர். படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள், நடிகர் தாமு மற்றும் ஐபிஎஸ் திருநாவுகரசு ஆகியோருக்கும் நியூஸ்7 தமிழுக்கும் நன்றி தெரிவித்தனர்.