For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி - கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

01:51 PM Dec 19, 2023 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி   கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்
Advertisement

நியூஸ் 7 தமிழின் செய்தி எதிரொலி - கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடக்கம்!

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.  இதனால்,  டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள தங்களை மீட்க இதுவரை யாரும் வரவில்லை. பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் என எந்தவித பொருட்களும் வழங்கவில்லை என ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மீட்பு குழு உணவு பொருட்கள் வழங்கியும்,  மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டும் வருகிறது.

நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  தனித்தீவுகளாக கிராமங்கள் தத்தளிப்பதால், தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் ஈடுபடுவதால் அனைவரையும் மீட்க மேலும் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே,  தனித்தீவுகளாக காட்சியளிக்கும் கிராமங்களில் இருந்து பொதுமக்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை என நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது.  இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக ஹெலிகாப்டர்களை வழங்க வேண்டும் என  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வரை விமானப்படையின் நான்கு ஹெலிகாப்டர்களும், கடற் படையைச் சார்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் கடலோர காவல் படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
Advertisement