For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

11:38 PM Jan 24, 2024 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு   உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர் . நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த  காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். 

Tags :
Advertisement