Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ் 7 செய்தி எதிரொலி! குவைத்தில் சிக்கியுள்ள பெண்ணை மீட்க திமுக எம்பி கனிமொழி நடவடிக்கை!!

03:50 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கியுள்ள திருப்பூரை சேர்ந்த பெண்ணை மீட்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது. இந்நிலையில் யோக மகேஸ்வரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்தார் கனிமொழி.

குவைத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றண்டு விழாவில் பங்கேற்பதற்காக கனிமொழி அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராச்சாமி, திமுக அயலக அணியின் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, யோக மகேஸ்வரியை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

குவைத்தில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் தூதராக அதிகாரிகளுடன் கனிமொழி விவாதித்தார். இந்நிலையில், யோக மகேஸ்வரியை விரைவில் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தூதரக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

Tags :
DmkmpKalanidhi VeeraswamyKanimozhiKuwaitMember of Parliamentnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article