நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் | புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கன் நியமனம்...!
புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக காரைக்கால் ஆட்சியர் குலோத்துங்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தலைமைச் செயலர் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த இ.வல்லவன் கோவாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த குலோத்துங்கன் புதுச்சேரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். அரசு செயலா் முத்தம்மாவுக்கு சுகாதாரம், குடிமைப் பொருள் வழங்கல் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலம் ஆகிய துறைகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவருக்கு பாண்கோ் தலைவா் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. புதுவை பொதுப் பணித் துறை செயலராக உள்ள மணிகண்டன், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். அரசு செயலா் ஜெயந்த்குமாா் ரே பொதுப் பணித் துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறைக்கு நிரந்த செயலா் நியமிக்கும் வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், பொலிவுறு நகா்த்திட்ட செயலாக்க அதிகாரி மற்றும் திட்ட அமலாக்கத் துறை திட்ட இயக்குநா் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு செயலா் பங்கஜ்குமாா் ஜா புதுதில்லியில் உள்ள புதுவை அரசு விருந்தினா் மாளிகையின் உள்ளிருப்பு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை ஆளுநா் உத்தரவின்படி, புதுவை பணியாளா் நலன், சீா்திருத்த துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.