Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேச்சுவார்த்தை தோல்வி - விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!

06:39 AM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Advertisement

 

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறினர். ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்தது. எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாருடன் மோதலுக்குப் பிறகு அவர்கள் இரவு எல்லைப்பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக கூறினர்.

பொறுமையை சோதித்தால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். “ஊசி முதல் சுத்தியல் வரை. எங்களின் வண்டிகளில் கற்களை உடைக்கும் கருவிகள் உட்பட அனைத்தும் உள்ளன. ஆறு மாத ரேஷன் உடன் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளோம். ஹரியானாவைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களுக்குக்கூடப் போதுமான டீசல் எங்களிடம் உள்ளது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை” என்று பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இருந்து வந்துள்ள விவசாயி ஒருவர் கூறினார்.

விவசாயிகளின் பயணத்தை முறியடிக்க டிராக்டர்களுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல இடங்களில் நடைபெறும் போலீஸ் சோதனை காரணமாக எல்லைப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில் மத்திய அரசுடன் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பேச்சுவாரத்தை  முடிந்ததும், விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்ததாவது..

"பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனவே போராட்டம் அமைதியாக தொடரும்.. வேறு எதுவும் செய்ய மாட்டோம்.  சக விவசாயிகளிடமும் இதுகுறித்து முறையிடுவோம். மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள், அதுவரை நாங்கள் காத்திருப்போம்... ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வோம்” என தெரிவித்தார்.

 

Tags :
DelhiDelhi ChaloDelhi Chalo Protestfarmer protestformersProtestunion govt
Advertisement
Next Article