For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளநிலை மருத்துவ படிப்புக்காக நாளை நீட் தேர்வு!

10:13 AM May 04, 2024 IST | Web Editor
இளநிலை மருத்துவ படிப்புக்காக நாளை நீட் தேர்வு
Advertisement

இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை (மே 5) நடைபெற உள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ்,  பிஎஸ்எம்எஸ்,  பிஏஎம்எஸ்,  பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.  இந்த நிலையில்,  இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை (மே 5) நடைபெற உள்ளது.  தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.  இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  இதில் 10,18,593 பேர் ஆண்கள்,  13,63,216 பெண்கள்,  24 பேர் திருநங்கைகள்.  மேலும், தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மாநிலங்களின் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அண்மையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து,  நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி 20 நிமிடம்) நடைபெறுகிறது.  இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.  இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும்.

நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும்,  மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தரவேண்டும் என்றும்,  கடைசி நேர பதற்றங்களை தவிர்க்க,  மாணவர்கள் முன்கூட்டிய வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது.

' நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட்களில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு நடைமுறைகள் தொடர்பாக, https://neet.ntaonline.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Tags :
Advertisement