For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:43 PM Aug 25, 2025 IST | Web Editor
'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Advertisement

Advertisement

மத்திய அரசின் உயரிய விருதான "தேசிய நல்லாசிரியர் விருது"க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்களுக்கும், மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி ஆசிரியர் திருமதி. ரேவதி பரமேஸ்வரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

"திறமையான மாணவர்களை உருவாக்குவதில் உங்களுடைய பணி முக்கியமானது. வலிமையான பாரத தேசத்தை கட்டமைக்கும் மாணவர்களை உருவாக்கும் உங்களுடைய அரும்பணி மென்மேலும் பல உயரங்களைத் தொட, இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்" என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருது, ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரு ஆசிரியர்களின் வெற்றி, மாநிலத்தின் கல்வித்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

Tags :
Advertisement