Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேஷனல் ஹெரால்ட் வழக்கு - சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
08:43 PM Apr 15, 2025 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் ஆகியோரால் கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது. தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோா் உள்ளனா்.

Advertisement

இந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக வழக்கு ஏப். 25ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சிறப்பு நீதிபதி விஷால் கோங்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி, “முழுமையாக எதிர்த்து அணைத்து கோணங்களிலும் வாதாடப்படும். இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக எதுவும் இல்லாததால், இது அரசாங்கம் பழிவாங்தலை அம்பலப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
EDEnforcement DirectorateNational Herald CaseRahul gandhisonia gandhi
Advertisement
Next Article