Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாக்கி விட்டு தப்ப முயன்ற நாகர்கோவில் ரவுடி | சுட்டுப்பிடித்த #Kovai போலீஸ்...

10:53 AM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் தலைமறைவாக இருந்த ரெளடியை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை சுட்டுப் பிடித்தனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆல்வின் (40). இவர் ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில், ஆல்வினுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில் ஆல்வின் கோவை கொடிசியா மைதானத்தின் அருகில் இருப்பதாக காவல்துறைக்கு நேற்று நள்ளிரவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்ற போது, ஆல்வின் கத்தியால் தலைமைக் காவலர் ராஜ்குமார் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காவலர் ராஜ்குமார் கையில் காயம் அடைந்த நிலையில், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினைத் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ஆல்வினின் இரண்டு கால் முட்டிகளிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. காயமடைந்த ஆல்வின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கோவை அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜ்குமாரை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் அவர் நலமோடு இருப்பதாக காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
arrestedkovaishotgun
Advertisement
Next Article