For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீனாவில் வேகமாக பரவும் மர்ம நிமோனியா | WHO எச்சரிக்கை!

12:49 PM Nov 23, 2023 IST | Web Editor
சீனாவில் வேகமாக பரவும் மர்ம நிமோனியா   who எச்சரிக்கை
Advertisement

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு,  ஒரு புதிய நுரையீரல் நோய் அதிவேக மாக பரவி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Advertisement

கொரோனா வைரஸ் பிறகு, புதிய நுரையீரல் நோயால் சீனாவில் புதிய பதற்றம்  ஏற்பட்டுள்ளது.  இது ஒருவகை  மர்ம நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.  இந்த நோய் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது.  மருத்துவமனைகள் குழந்தைகளால் நிரம்பி வழியும் சூழல் உருவாகியுள்ளது.  இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து WHO அதிகாரப்பூர்வமாக சீனாவிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.  பெய்ஜிங் உட்பட நாட்டின் பல நகரங்களில் நிமோனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.  வடகிழக்கு சீனாவில் 500 மைல் தொலைவில் உள்ள பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மர்ம நிமோனியாவில்,  குழந்தைகள் நுரையீரலில் வலி மற்றும் அதிக காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.  நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளால்,  இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.  இந்நோய் வேகமாக பரவி
வருவதால்,  இந்த நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் மர்மமான நிமோனியா குறித்து அறிக்கை வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளது.  இந்த நோய் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இதனுடன், குழந்தைகளிடையே பரவும் இந்த நோய் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு சீன சுகாதார அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.

நிமோனியாவின் அதிகரித்து வரும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சுவாச நோயின் அபாயத்தைக் குறைக்க மக்கள் மருத்துவர்கள் கூறும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று WHO கூறியுள்ளது.

Advertisement