For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!

04:42 PM Feb 10, 2024 IST | Web Editor
my v3 ads உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது
Advertisement

MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வந்த My V3 ads நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்வதாக புகார் எழுந்திருந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்க்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர் கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கடந்த பிப். 6-ம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கிக் கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறினர்.

ஆனால் காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காததால் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags :
Advertisement