For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“என் காதல் நிக்கோலாய்.. என் உயிர் சினிமா” - நடிகை வரலட்சுமி சரத்குமார்!

03:49 PM Jul 15, 2024 IST | Web Editor
“என் காதல் நிக்கோலாய்   என் உயிர் சினிமா”   நடிகை வரலட்சுமி சரத்குமார்
Advertisement

“என் காதல் நிக்கோலாய். என் உயிர் சினிமா, நான் தொடர்ந்து நடிப்பேன்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று தனது கணவர் மற்றும் தந்தையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி. கல்யாணத்தின் போது உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய காதல் நிக்கோலாய் சச்தேவ்தான். ஆனால் என்னுடைய உயிர் சினிமா என்பது எல்லோருக்கும் தெரியும். நிறைய பேர் நீங்கள் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பீர்களா என்று கேட்டு இருந்தார்கள்.

என் கணவர் பேசியதில் இருந்தே நீங்கள் அதற்கான பதிலை தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். எப்போதுமே என்னைப் பற்றி நல்ல விதமாக பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன படம் செய்தாலும், அதற்கான பாராட்டை நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அது இன்னும் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார்.

கிட்டதட்ட 14 ஆண்டுகள் இருவரும் பழகி வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Tags :
Advertisement