பஞ்சாப்க்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை!
ஐபிஎல் போட்டிகள் ப்ளே ஆஃபை நெருங்கிய நிலையில், இன்றைய 69வது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதன்படி பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், வைஷாக் விஜய் குமார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளுடன் உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் மும்பை அணி, 13 ஆட்டங்களில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது.