For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் இருந்து திரும்பிய களத்தில் இறங்கிய எம்.பி.கனிமொழி - மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு

12:21 PM Dec 18, 2023 IST | Jeni
டெல்லியில் இருந்து திரும்பிய களத்தில் இறங்கிய எம் பி கனிமொழி   மழை  வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு
Advertisement

டெல்லியில் இருந்து தூத்துக்குடி திரும்பிய கனிமொழி எம்.பி., மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ள

ன. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை - அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு...!

இந்நிலையில், கனமழை மீட்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி. கனிமொழி டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அரசு பேருந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவனும் ஆய்வு செய்தார்.

Tags :
Advertisement