For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பணமோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்!

01:55 PM Oct 28, 2024 IST | Web Editor
பணமோசடி வழக்கு   சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்
Advertisement

பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விமல் இன்று ஆஜராகிறார்.

Advertisement

நடிகர் விமல் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இத்திரைபடத்தை தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை  சினிமா சிட்டி என்ற நிறுவனத்தின் சார்பில் கங்காதரன் பெற்றிருந்தார். இந்த விநியோக உரிமைக்காக அவர் ரூ.3 கோடியை திருப்பி கொடுக்கக்கூடிய டெபாசிட் என்கிற அடிப்படையில் நடிகர் விமலிடம் கொடுத்திருந்தார்.

ஆனால் படம் அவர் கொடுத்த தொகைக்கு ஈடாக வசூல் செய்யவில்லை. எனவே ஒப்பந்தப்படி ஒரு கோடி ரூபாயை விமல் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை விமல் திருப்பி தராததால், விமல் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த கங்காதரன், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீடியேசனுக்கு அனுப்பப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடிகர் விமல் ஆஜராகிறார்.

Tags :
Advertisement