Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி - 3 விமானங்கள் ரத்து!

10:52 AM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.

சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரா, ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மும்மை, ஹைதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரவிருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்த புறப்படவிருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

Tags :
Andhra PradeshChennaiCycloneCyclone MichaungHeavy rainfallIndiaMichaungNews7Tamilnews7TamilUpdatesTamilNaduweather forecast
Advertisement
Next Article