சிறுமி பாலியல் வழக்கு - முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனைத்து காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த வைரவன் என்ற 59 வயது முதியவர் 2024 ஆம் ஆண்டு தனியாக இருந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு என மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த
புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று(ஜுன்.03) இந்த வழக்கு விசாரணை முடிவுற்று வைரவன் என்ற முதியவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 376 (A) கீழ் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 506-ன் கீழ் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு அபராத தொகையாக 12 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதோடு இந்த தண்டனைகள் அனைத்தையும் வாழ்நாள் ழுவதும் சிறையில் அனுபவிக்க வேண்டும் (சாகும் வரை) என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியதோடு சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 10 லட்சம்
ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் 2 லட்சம் ரூபாய் சிறுமியின்
பராமரிப்பு செலவிற்காக உடனடியாக வழங்க வேண்டும் மீதமுள்ள 8 லட்சம் ரூபாயை சிறுமியின் எதிர்கால வாழ்விற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனை அடுத்து குற்றவாளி முதியவரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.