For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு - இன்று தீர்ப்பு.!

08:21 AM Jan 12, 2024 IST | Web Editor
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு   இன்று தீர்ப்பு
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு  இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

Advertisement

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகினர்.

சிறையில், 207 நாட்களாக மனுதாரர் உள்ளார். இந்த வழக்கின் விசாரணையும், காவல் விசாரணையும் முடிந்து விட்டது. கைது பற்றிய அனைத்து ஆவணங்களும் அமலாக்க துறையிடம் உள்ளன. சிறையில் தொடர்ந்து அடைப்பது, மனுதாரருக்கு தண்டனையை முன்னரே விதிப்பது போல் ஆகும் என  மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன்  வருமானவரித்துறை அதிகாரிகளை மனுதாரர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த பணம் முறையாக சம்பாதித்தது என்று அர்த்தம் இல்லை. வருமான ஆதாரம் குறித்து விளக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்கிறார்.

சூழ்நிலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் கூறி ஒவ்வொரு மாதமும் மனு தாக்கல் செய்ய முடியாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கைதானால் குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை அடுத்து ஜாமின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ். அல்லி தெரிவித்தார். இந்நிலையில் இன்று உத்தரவு பிறப்பிக்கபட உள்ளது.

Tags :
Advertisement