Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் மீண்டு வர அமைச்சர் அன்பில் மகேஸ் தான் காரணம்” - மாணவர் சின்னத்துரை நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

02:31 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement

தான் மீண்டு வர பள்ளி கல்வித்துறை அமைச்சரே காரணம் என முதலமைச்சரை சந்தித்த பின், மாணவர் சின்னத்துரை நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களது வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 பேர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.

விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது.

இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்டநாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார். பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியோடு எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாணவர் சின்னத்துரையை தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (மே 7) சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பின்னர், நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சின்னதுரை,  தான் மீண்டு வர பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸே காரணம் என தெரிவித்தார். அவருடன் நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்...

Tags :
#12th Exam Result12th ResultAnbil MaheshDMKexam resultsNews7Tamilnews7TamilUpdatesTamilNadutn schools
Advertisement
Next Article