For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MiladNabi | மீலாது நபியை முன்னிட்டு பேரணி... 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

09:34 PM Sep 17, 2024 IST | Web Editor
 miladnabi   மீலாது நபியை முன்னிட்டு பேரணி    3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு
Advertisement

மீலாது நபியை முன்னிட்டு நாகூரில் நடைபெற்ற பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

Advertisement

நாகை மாவட்டம், நாகூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவான மிலாது விழா
இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மதரஸா பள்ளி மாணவ,
மாணவிகளின் பேரணி நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி நாகூர் தர்கா குளத்தில் இருந்து புறப்பட்டு நூல் கடைத்தெரு, மொய்தீன் பள்ளி தெரு, ஜடையினா ஹாஜியார் தெரு, கலிபாசாஹிப் தெரு, தெற்கு தெரு, மியான் தெரு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது.

இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் #Online மோசடிகள் – வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?

இந்த பேரணியில் கலந்துக் கொண்ட மாணவ - மாணவிகள் நபிகள் நாயகம் திருப்பாடலை பாடி கொண்டே சென்றனர். அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம், இஸ்லாமிய பெரியோர்கள், தன்னார்வ அமைப்பு இளைஞர்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் குளிர்பானம், சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Tags :
Advertisement