For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

MI vs DC | பவுலர்களுக்கு தண்ணி காட்டிய சூர்யகுமார் யாதவ்.. டெல்லிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 181 ரன்களை மும்பை இலக்காக நிர்ணயித்தது.
09:50 PM May 21, 2025 IST | Web Editor
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 181 ரன்களை மும்பை இலக்காக நிர்ணயித்தது.
mi vs dc   பவுலர்களுக்கு தண்ணி காட்டிய சூர்யகுமார் யாதவ்   டெல்லிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
Advertisement

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெற்று வரும் 63 லீக் ஆட்டத்தில் மும்பை  - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

Advertisement

இதையும் படியுங்கள் : ரயில்வே பாலம் அருகே கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொடரும் மர்மம்!

இதில் ரோகித் சர்மா 5 ரன்களிலும், ரியான் ரிக்கெல்டன் 25 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களம் கண்ட வில் ஜேக்ஸ் 21 ரன்களிலும், திலக் வர்மா 27 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடி வருகிறது.

Tags :
Advertisement