For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

21 மாவட்டங்களில் கொட்டப் போகும் மழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11:34 AM Mar 12, 2025 IST | Web Editor
21 மாவட்டங்களில் கொட்டப் போகும் மழை    எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
Advertisement

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

Advertisement

தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தூத்துக்குடி
தென்காசி
காரைக்கால்

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர்
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
விழுப்புரம்
கடலூர்
அரியலூர்
திருச்சி
மதுரை
புதுச்சேரி

Advertisement