Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

RCBக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்ற CSK அணி பந்துவீச்சு தேர்வு!

07:31 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவிச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 67 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.

இதையும் படியுங்கள் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!

இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று 68வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் முதலில் பேட்டிங்க் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags :
chennai super kingsCSKVSRCBIPLIPL 2024RCBvsCSKRoyal Challengers Bangalore
Advertisement
Next Article