For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“என் ஒவ்வொரு படைப்பையும் கொண்டாடி தீர்க்கும் முதல் ஆள்” - சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த #MariSelvaraj!

03:02 PM Aug 24, 2024 IST | Web Editor
“என் ஒவ்வொரு படைப்பையும் கொண்டாடி தீர்க்கும் முதல் ஆள்”   சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த  mariselvaraj
Advertisement

வாழை படத்தினை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் நேற்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். 'வாழை' என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை" என்று சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், "பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள். கர்ணன், மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி" என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement