For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘வாழை’ திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட #MariSelvaraj !

12:53 PM Aug 23, 2024 IST | Web Editor
‘வாழை’ திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட  mariselvaraj
Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படம் ரிலீஸ் குறித்து நெகிழ்ச்சியாக பதிவொன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, நடிகர் சூரியும் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழை ரிலீஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் அன்பின் வணக்கம், இன்று என் நான்காவது திரைப்படமான ‘வாழை' வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன். பிரியங்களுடன் மாரி செல்வராஜ் எனப் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement