For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!

09:26 AM Nov 07, 2023 IST | Web Editor
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு   மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்
Advertisement

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மிசோரமில் வாக்களிக்காமல் முதலமைச்சர் திரும்பிச் சென்றார்.

Advertisement

  • சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.

மேலும்  ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

‘சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சுமார் 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படும், சக்ஷம் யோஜனா(Saksham Yojna) திட்டத்தின் கீழ் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று  நடைபெறுகிறது. அதேபோன்று, மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறவிருக்கிறது.  சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதி இன்று தொடங்கியது. சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 5,304 வாக்குச் சாவடிகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதேபோல மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியது.  இந்த நிலையில் மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்ற அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நீண்டநேரம் காத்திருந்தார். இதன் பின்னரும் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

Tags :
Advertisement