For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MeToo ஆண்களையும் விட்டுவைக்கவில்லையாம்… மலையாள சினிமாவை ஆட்டிப் படைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்!

01:38 PM Aug 31, 2024 IST | Web Editor
 metoo ஆண்களையும் விட்டுவைக்கவில்லையாம்… மலையாள சினிமாவை ஆட்டிப் படைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்
Advertisement

மலையாள நடிகையொருவா் கடந்த 2017-ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி, மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டல்களை வெளிப்படுத்திய அந்த அறிக்கையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. நீதிபதி ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக மலையாள திரையுலகத்தைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில், பெண்களின் பாலியல் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு அண்மையில் அமைத்திருந்தது. இந்த சிறப்புக் குழு, புகார் அளித்த நடிகைகளிடம் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

ஆண்களையும் விட்டுவைக்காத கொடுமை!

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியாக மலையாள இயக்குநர் ரஞ்சித், தனது உடைகளை களையச்சொல்லி, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் பதிவு செய்து கொண்டனர். ஏற்கனவே, ரஞ்சித் மீது நடிகை புகார் கொடுத்திருக்கும் நிலையில், இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சித் மீது இளைஞர் கொடுத்த புகாரில், கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரஞ்சித்தை சந்தித்ததாகவும், அப்போது தனது உடைகளை வலுக்கட்டாயமாக களையச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டதகாவும், பிறகு பாலியல்ரீதியாக துன்புறுத்தியதகாவும் கூறியிருக்கிறார்.

மேலும், ஆடையின்றி எடுத்த தன்னுடைய புகைப்படங்களை அவர் தன்னுடைய பெண் தோழியும், நடிகையுமான ஒருவருக்கு அனுப்பியிருப்பதாக ரஞ்சித் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய ஆதாரங்களுடன் அவர் விசாரணைக் குழுவிடம் தனது புகாரை அளித்துள்ளார்.

Tags :
Advertisement