Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மஹுவா மொய்த்ரா டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய நோட்டீஸ்!

11:23 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

மஹுவா மொய்த்ரா தனது டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என  நாடாளுமன்ற குடியிருப்பு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிரா நந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை செய்தது.

இது தொடர்பான அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதோடு,  அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு,  அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தொடர்ந்து, தனது மனுவை விசாரிக்க டிச. 13 அல்லது டிச. 14-ம் தேதி பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கானது கடந்த டிச.15-ம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஜன. 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு ஜன.3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக 3 வாரத்திற்குள் மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை நிர்வகிக்கும் எஸ்டேட் இயக்குநரகம் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு  கேட்டுக் கொண்டது.  இதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா உடனடியாக வெளியேற வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மஹுவ்வா மொய்த்ராவை பங்களாவில் இருந்து  வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால்,  விரைவில் காலி செய்வதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற குடியிருப்பு இயக்குநரகத்திலிருந்து அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
Delhi ResidentMahua MoitranoticeSupreme courtTrinamool Congress MPVacate
Advertisement
Next Article