For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகா கும்பமேளா - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு !

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
09:50 AM Feb 01, 2025 IST | Web Editor
மகா கும்பமேளா   முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே, கடந்த 29ம் தேதி கும்பமேளா நடைபெறும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கும்பமேளாவில் கலந்துகொள்ள நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார்.

Tags :
Advertisement