For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி!

01:02 PM Nov 28, 2023 IST | Web Editor
மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி   உச்சநீதிமன்றம் அதிரடி
Advertisement

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கும் திட்டத்திற்கு எதிராக கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். அதனால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை தொடர்ந்து, அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement